Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 2, 2016

திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வங்கி கணக்கு முடக்கம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் விரிவாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் நரேந்திர ரெட்டி, இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதைதொடர்ந்து கடந்த 4 நாட்களாக அவரது வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேவஸ்தான பணியாளர்களுக்காக சப்தகிரி கிராமிய வங்கியில் உள்ள நரேந்திர ரெட்டியின் வங்கி கணக்கை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அவரது வங்கி கணக்கில் ரூ. 6.5 லட்சம் பணமும், லாக்கரில் அரை கிலோ தங்கம் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.இதேபோல், தேவஸ்தான ஊழியர்கள் மோகன்ரெட்டி, தங்கவேலு, சரத்பாபு ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic