சென்னை : மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் சந்திரமோகன் கூறியுள்ளார்.
மேலும் அவர், சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார். இக்குழுவினர் மணலி, ஆவடி, அடையாறில் முகாமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் படகுடன் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments