Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

ஜாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி தற்கொலை முயற்ச்சி

ஜாதி மாறி கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆணவப் படுகொலைக்கு ஆளான தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலையில் நடுரோட்டில் பட்டப்பகலில் ஏராளமான பொதுமக்கள் கூடுகின்ற இடத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக சங்கர் கவுசல்யா ஆகிய இருவரும் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். உடலில் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணக்கோலத்தில் சங்கர் - கவுசல்யா

அவரது மனைவி கவுசல்யா தலையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார். இந்நிலையில் சங்கரின் பிரிவை தன்னால் மறக்க இயலவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் பலரிடம் தெரிவித்து வந்த கவுசல்யா இன்று காலை தற்கொலைக்கு முயற்ச்சிதிருக்கிறார். அவரை மீட்ட உறவினர்கள் உடுமலைப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை தாய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic