தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழகின் இறுதி விசாரணையை ஜூன் 1 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் தெர்வித்துள்ளார்கள்.
கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை சொட்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலார் அன்பழகன் ஆகியோர் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இவ்வழக்கிற்கான இறுதி விசாரணையை ஜூன் 1ஆம் தேதி ஒத்திவைப்பதாக இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.
அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் அன்றைய தினமும் தீர்ப்பு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் அன்றைய தினமும் தீர்ப்பு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments