ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 வருடங்களாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகேசன், நளினி உட்பட 7 பேரின் விடுதலை கோரிக்கைக்காக வேலூரிலிருந்து சென்னை கோட்டை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த பேரணிக்கு தற்போது காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாளை பிற்பகல் 1 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தலைமைச்செயலகம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணிக்கு சினிமா நட்சத்திரம் விஜய் சேதுபதி உட்பட ஏராளமானவர்கள் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments