பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் படி, தான் டெல்லி நிஜாமுதீன் பகுதிக்கு சென்ற போது தன்னை நெறுங்கிய மூன்று பேர் காரில் ஏறுமாறு வற்புறுத்தினர், நான் மறுத்தும் என்னை வழுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். தப்பிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. காரில் இருந்த மூன்று பேரும் என்னை பாலியல் வன்முறை செய்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து சன்லைட் காலணி அருகே விட்டுச்சென்றனர். என அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் தொடக்கமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தியாவிலேயே புது டெல்ல்யில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

No comments:
Write comments