இதுதொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, ரகுராம் ராஜன் தேசப்பற்றில் எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு குறைந்தவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
“ராஜனுடனான எனது அனுபவம் சிறப்பானதாகவே உள்ளது. அவர் தனது பணியை சிறப்பாக செய்தார். நம்மை காட்டிலும் ராஜனின் தேசப்பற்று குறைந்தது எனக் கூறுவது தவறு. அவர் இந்தியாவின் நலனுக்காக பணியாற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்தியாவுக்காகவே பணியாற்றினார். இனி எங்கு சென்றாலும் இந்தியாவுக்காக பணியாற்றுவார்.” என தனது பேட்டியில் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ராஜனை தொடர்ந்து பணியாற்ற விட மாட்டோம் என பலர் குற்றம்சாட்டினர். ஆனால் தற்போது அது தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரசு நிர்வாகத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. சிலரின் விளம்பர பேச்சு நாட்டுக்கு பலன் தராது.” எனவும் சூசகமாக அவர் சுவாமியை தாக்கியுள்ளார். சுப்பிரமணிய சுவாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடியின் பதில் அமைந்திருந்தது சுவாமி ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments