பாட்னா: மாட்டு தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் இன்று ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
பீஹாரில் மாநிலத்தில் கடந்த 1990 முதல் 1997 வரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் முதலமைச்சரக இருந்த காலகட்டத்தில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் மாட்டுதீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, தேர்தலில் போட்டியிடவும் தடைவிதிக்கப்பட்டிருனது. இதே மாட்டுதீவன் ஊழல் விவகாரத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையில் இன்று சிபஐ நீதிமன்றத்தில் லல்லு ஆஜரானார். இவ்வழக்கிலும் வெகுவிரைவிலேயே தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments