கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்ட தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்திய தடகள வீராங்கனை டுட்டி சந்த் 11.30 வினாடியில் இலக்கை எட்டினார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான 11.32 வினாடி என்ற இலக்கை முறியடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ள 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 1980ம் ஆண்டு பி.டி.உஷா மட்டுமே இந்த பெருமையை பெற்றிருந்தார்.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை சாம்பியன்ஷிப்பில் 0.01 வினாடியில் டுட்டி சந்த் ஒலிம்பிக்கில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். தற்போது கடின முயற்சியால் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

No comments:
Write comments