அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லேண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தனது துப்பாகியால் சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார்.
தொடர்ந்து, பல மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொலை செய்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், அந்நகரத்தில் நிகழந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இது என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக, பாடகர் கிறிஸ்டினா கிரிம்மீ என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments