அஸ்ஸாம் மாநில பா.ஜ.க தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை விடுவிக்க 1 கோடி ரூபாய் பணயத்தொகை கேட்டுள்ளதாக தெரிகிறது.
அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆகஸ்ட் 1ஆம் தே ரத்னாஸ்வீர் மோரான்ஸ் மகன் குல்தீப்பை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். இப்போது வெளியிட்டு உள்ள வீடியோவில் குல்தீப்பை விடுதலை செய்ய உல்பா பயங்கரவாதிகள் ரூபாய் 1 கோடி கேட்டுள்ளனர். குல்தீப்பை கடத்தி வைத்துள்ள பயங்கரவாதிகள் வீடியோ காட்சியையும் அனுப்பியுள்ளனர்.
இப்பகுதியில் உல்பா பயங்கரவாதிகள் கடத்தலில் ஈடுபடுதல் என்பது பொதுவான விஷயமாகும், பெற்றோர் மற்றும் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வாலிபர் குல்தீப் மோரன் வீடியோவில் கூறிஉள்ளார். மாநிலத்தில் இவ்வருட ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது.

No comments:
Write comments