ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இன்று இலங்கை செல்லவிருக்கிறார்.ஐ.நா செயலாளரின் மேற்கொள்ளு இந்த பயணம் ஆசிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக அவர் இலங்கை செல்லவிருக்கிறார்.
இந்த பயணட்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை செயலாளர் சந்திக்கவுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும், அரச பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். இலங்கை பயணத்தின்போது, அங்கு நிரந்த அமைதி ஏற்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பான்கீ மூன் உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை ஐ.நா செயலாளர் யாழ்ப்பாணத்திற்கும் செல்லவிருக்கிறார். அங்கு நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிமுறைகளை கண்டறியவுள்ளார். எனினும் வடக்கு மாகாண முதலமைச்சருடன் நேரடியாக சந்திப்புக்களை மேற்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Write comments