பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியா திரும்பிய சாய்னாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனைக்கும் பின் முழங்காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் படி இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இருப்பினும் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு சாய்னா ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னாவால் எந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழங்காலில் பிரச்சனையோடுதான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார் சாய்னா. இருப்பினும் அவர் முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியா திரும்பிய சாய்னாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனைக்கும் பின் முழங்காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் படி இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இருப்பினும் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு சாய்னா ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னாவால் எந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழங்காலில் பிரச்சனையோடுதான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார் சாய்னா. இருப்பினும் அவர் முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments