கடந்த ஜூன் 25ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது 'ஏ, பி' என இரு மாதிரிகளிலும் உறுதியானது.இவருக்குப் பதில் மாற்று வீரராக பிரவீண் ராணா (74 கி.கி.,) தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே டில்லி, தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பு ('நாடா') நரசிங் யாதவ் பிரச்னை குறித்து 2 நாட்கள் விசாரணை நடத்தியது. தனது உணவில் சக 'ஜூனியர்' வீரர் ஒருவர் தடை செய்யப்பட்ட மருந்தை கலந்து விட்டதாக வாதாடினார்.
இதனிடையே நர்சிங் யாதவ் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய, தலைவர் நவின் அகர்வால் தலைமையில், சில நாட்களுக்கு முன் பல மணி நேரம் 'நாடா' கூட்டம் நடந்தது.முடிவில் தீர்ப்பு எதுவும் கூறமால் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று முடிவு கூறப்பட்டது. அதில்,'நர்சிங் யாதவ் யாரோ ஒருவர் செய்த சதியால் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பலனை நரசிங் யாதவுக்கு சாகதமாக வழங்கி, ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்,'என, தெரிவிக்கப்பட்டது

No comments:
Write comments