மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 1929 ஆம் ஆண்டு பார்லே புரொடெக்ட்ஸ் பி.வேட் லிமிடட் சார்பில் முதன் முதலாக இந்த பார்லே-ஜி பிஸ்கட் தொழிற்சாலை துவங்கப்பட்டது. குலுகோஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய பார்லே-ஜி பிஸ்கட் வகைகள் இந்த கம்பெனியின் பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்த மும்பை அருகில் இருக்கும் பார்லே என்ற பெயரைக்கொண்டே இது நிறுவப்பட்டது, அன்று முதல் இப்பகுதியும் பிரபலமாகியது.
நுகர்வோர் கலாச்சாரம், கண்ணைகவரும் பல்வேறு விதமான வெளிநாட்டு பிஸ்கட்டுகளின் வரவால் கடந்த சில ஆண்டுகளாகவே பார்லே-ஜி பிஸ்கட்களின் விற்பனை மந்தமாக இருந்துவந்தது. இதனால் நிறுவனத்தை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பார்லே நிறுவனம் தனது பார்லே-ஜி பிஸ்கட் உற்பத்தியை நிறுத்தியதோடு நிறுவனத்தின் கதவுகளும் நிரந்தரமாக மூடப்பட்டது.
இருந்தபோதிஉம் பார்லே நிறுவனத்திற்கு ஏகப்பட்ட இன்னபிற தொழிற்சாலைகள் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக மற்ற தயாரிப்பு பொருட்களான ஃப்ரூட்டி ஜூஸ், போர்பன் பிஸ்கட் போன்றவை இன்னமும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. பார்லே ஜி பிஸ்கட்களை சுவைத்த பலரும் தங்களது இனிமையான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் மூடுவிழாவும் பெரிய அளவில் செய்தியாக்கப்பட்டு வருகிறது.
No comments:
Write comments