பிரபல கென்டகி ஃப்ரைடு சிக்கன் (கே.எஃப்.சி)யில் முஸ்லிம்கள் யாரும் சிக்கன் வாங்கி உண்ணக்கூடாது என புதிய பத்வா(தீர்ப்பு) கொடுப்பதாக தர்கா-இ-அலா கஜ்ரத் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முப்தி சலீம் நூரி என்பவர் கூறியிருப்பதாவது கே.எஃப்.சி கடைகளில் அறுக்கப்படும் கோழிகள் ஹலால் முறையில் அறுக்கப்படுவதில்லை எனவும், அது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளவர், முஸ்லிம்கள் யாரும் கே.எஃப்.சியிலிருந்து கோழிக்கறி வாங்கி சாப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹலால் செய்யப்பட்ட கறிதான் வைத்திருக்கிறோம் என தொங்கவிடப்பட்ட பலகைகளில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை, கோழிகள் எவ்வாறு அறுக்கப்படுகிறது என கேட்டால் அதற்கான சரியான பதில் அவர்களிடத்திலிருந்து வருவதில்லை என நூரி தெரிவித்துள்ளார்.
இதே நபர் இதற்கு முன்னர் போக்மேன் கோ வையும் உபயோகப்படுத்த வேண்டாம் என பத்வா கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments