Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 12, 2016

முன்னாள் வங்கதேச எம்.பிக்கு மரண தண்டனை



சுதந்திரத்திற்காக போராடியவர்களை பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து கொன்று குவித்த முன்னாள் வங்கதேச எம்.பி சகாவது ஹூசைனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இணைந்திருந்த வங்கதேசத்தில், கடந்த 1971-ல் பாகிஸ் தானுக்கு எதிராக சுதந்திரப் போர் நடந்தது. அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக நடத்திய வன்முறையில் சுமார் 30 லட்சம் பேர் பலியாயினர்.  இதுதொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜமாத் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சகாவத் ஹுசைனுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்போது, சகாவத் உட்பட 2 குற்றவாளிகள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic