ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கிய சங்கம் 4 ‘உலகத் தமிழர் உரையாடல்’ நிகழ்வுகள் 4 நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று, தமிழினத்தின் தனித்துவம்மிக்க புரவலரும், தமிழ் தேசிய அரசியலை எண்ணற்றவர்களின் இதயத்தில் விதைத்தவருமான ஐயா நா.அருணாசலம் அவர்களின் பெயரைத் தாங்கிய அரங்கில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இன்றைய நிகழ்வுகள்:
1. கால(னி)ணிகளை எப்போது கழட்டப் போகிறோம்? என்ற தலைப்பில் திருச்சி தூய ஜோசப் மேலாண்மைக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் அருட்திரு ஜோ அருண் பேசவுள்ளார்.
2. நெடுங்கடல் நடந்து நிலம்விரிந்த அருந்தமிழ் என்னும் தலைப்பில் கடலியல் அறிஞர், ஒரிசா பாலசுப்ரமணியன் உறையாற்றவுள்ளார்.
3. உலகளந்த உயர் தமிழ் என்ற தலைப்பில், தமிழ்நதி மரபின்மைந்தன் முத்தையா பேசுகிறார்.
இந்நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு பில்லர் மையத்தில், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவிய ஐயா நா.அருணாசலம் அரங்கில் நடைபெறுகிறது.

No comments:
Write comments