ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் நிலவி வருகிற நிலையில், அவரது உடல் சிதைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பிரேத பரிசோதனை செய்யும்போது நிச்சயம் சிக்கல் ஏற்படலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு அரசு மருத்துவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது, ராம்குமாரின் உடல் அதிக குளிரூட்டப்பட்ட தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.
எனவே கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் உடல் தசைகள் சுருங்காமலும், சிதையாமலும் இருக்கும். இன்னும் பல நாட்கள் உடலை பாதுகாக்கும் நவீன வசதிகள் உள்ளன. இதனால் பிரேத பரிசோதனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கு அரசு மருத்துவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது, ராம்குமாரின் உடல் அதிக குளிரூட்டப்பட்ட தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.
எனவே கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் உடல் தசைகள் சுருங்காமலும், சிதையாமலும் இருக்கும். இன்னும் பல நாட்கள் உடலை பாதுகாக்கும் நவீன வசதிகள் உள்ளன. இதனால் பிரேத பரிசோதனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என கூறியுள்ளனர்.

No comments:
Write comments