குஜராத் மாநிலத்தின் பல முக்கிய பகுதிகளில் ஒசாமா பின்லேடன், ஹபீஸ்
சையது உள்ளிடோரின் புகைப்படங்களுடன் அரவிந்த கெஜ்ரிவால் புகைப்படமும்
பேனராக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
குஜராத்திரல்
படேல் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில்
சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்திற்கு சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ளார்.
அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்
பேனர் குறித்து கெஜ்ரிவால், குஜராத்தில் தனது தலைமையில் நடைபெறவுள்ள
பேரணிக்கு இடையூறு செய்யவே பாஜக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியினர் மூலம் அனைத்து பேனர்களும் அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

No comments:
Write comments