Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 9, 2016

5000000000000 கோடிகள் ஊழல்

larger scam in india

செல்பேசித் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப வசதிக்கான அலைக்கற்றை தொலைத்தொடர்புத்துறை மூலம் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ஒரேமுறையாக 4ஜி அலைக்கற்றை ஐந்து லட்சத்து 63,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏல  விற்பனை செய்வதற்காக திட்டமிடப்பட்டு  ஏலம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஐந்து நாட்கள் நடைபெற்றது.

ஐந்து லட்சத்து 66,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு வெறும் 65,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாக தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஐடியா செல்லுலர், பார்தி ஏர்டெல், டாட்டா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஏர்செல் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது.

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 5 நாட்கள் நடைபெற்ற அலைக்கற்றை ஏலம் மூலம் 65,789 கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேவை வரி போக மத்திய அரசுக்கு 32,000 கோடி ரூபாய் வரை முன்வைப்புத் தொகையாக கிடைக்கும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இந்த வெகு எதிர்பார்க்கப்பட்ட முன்னேறிய 4ஜி அலைக்கற்றை ஏலத்திலேயே 5.66 லட்சம் கோடிகள் அரசுக்கு வருமானமாக மதிப்பிடப்பட்டு வெறும் 65789 கோடிகள் மட்டுமே கிடைத்துள்ளது.ஒரு லட்சம் கோடியை கூட தொடவில்லை.

 ஆனால் பலஆண்டுகளுக்கு முன்னாள் வெறும் 2ஜி ஏலத்தில் 1.73 லட்சம் கோடி இழப்பீடு என்று இதைவைத்து வினோத்ராய் அறிக்கை வெளியிட்டு அதை பாஜக பூதாகரமாக்கியது. 

தற்போது 4ஜி வைத்து பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்தி வரும் நிலையிலேயே வெறும் 65 ஆயிரத்து 789 கோடிகள்தான் 4ஜி ஏலம் மூலம் கிடைத்தது என்றால் 2ஜி யில் ராஜா மீது குற்றம் சாட்டியது போல் பாஜக மோடி அரசு மீது 4ஜி ஏலத்தில் ஐந்து லட்சம் கோடிகள் அலைக்கற்றை முறைகேடு அல்லது அன்றைய  தினமணி மொழியில் பாஜக அமைச்சர் மனோஜ் சின்ஹா 5000000000000 கோடிகள் ஊழல் மோடிக்கு தொடர்பு? என்று செய்திகளை எதிர்பார்க்கலாமா?

நன்றி: சுகுமாரன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic