சென்னை(21 ஜன 2017): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை வாழ்த்த மெரீனாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் திடீரென விசிட் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரீனாவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நிரந்தர சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் யாருடைய ஆதரவும் தேவையில்லை என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று மெரீனாவுக்கு திடீரென வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பாராட்டினார்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சகாயத்தை வரவேற்று கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
No comments:
Write comments