ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன் என அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். மேலும், அதிமுக-வின் சக்திவாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளராக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றுள்ளார். இதற்கான தீர்மானம் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சசிகலா தலைமை பொறுப்புக்கு வர விருப்பமில்லாதவர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியை விட்டே விலகி விட்டனர். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபாவுக்கு ஆதரவாகவும் அதிமுக-வினர் சிலர் செயல்பட்டு வருகின்றனர். தீபா, அரசியலில் இறங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். தினமும் அவரது வீட்டின் முன்பு குவியும் ஆயிரக்கணக்கானோர், தீபாவை அரசியலில் இறங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தக்க சமயத்தில் தனது முடிவை அறிவிப்பேன் என தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல், எம்ஜிஆர் பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் மக்கள், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. தமிழகம், தமிழ் மக்களுக்காக இனி தொடர்ந்து பாடுபடுவேன்.
இன்று முதல் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். ஜெயலலிதாவின் வழி நடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற நட்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நான் அரசியலில் இறங்கி விட்டேன். ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன். எனது அரசியல் திட்டங்களை அறிவிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளை தவிர வேறு பொருத்தமான நாள் இல்லை. இளைஞர்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன்.
சசிகலா குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றிவிட்டதாக என்னால் கூற முடியாது. எனது பணியை பற்றி மட்டுமே என்னால் பேச முடியும் என்றார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். மேலும், அதிமுக-வின் சக்திவாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளராக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றுள்ளார். இதற்கான தீர்மானம் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சசிகலா தலைமை பொறுப்புக்கு வர விருப்பமில்லாதவர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியை விட்டே விலகி விட்டனர். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபாவுக்கு ஆதரவாகவும் அதிமுக-வினர் சிலர் செயல்பட்டு வருகின்றனர். தீபா, அரசியலில் இறங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். தினமும் அவரது வீட்டின் முன்பு குவியும் ஆயிரக்கணக்கானோர், தீபாவை அரசியலில் இறங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தக்க சமயத்தில் தனது முடிவை அறிவிப்பேன் என தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல், எம்ஜிஆர் பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் மக்கள், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. தமிழகம், தமிழ் மக்களுக்காக இனி தொடர்ந்து பாடுபடுவேன்.
இன்று முதல் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். ஜெயலலிதாவின் வழி நடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற நட்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நான் அரசியலில் இறங்கி விட்டேன். ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன். எனது அரசியல் திட்டங்களை அறிவிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளை தவிர வேறு பொருத்தமான நாள் இல்லை. இளைஞர்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன்.
சசிகலா குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றிவிட்டதாக என்னால் கூற முடியாது. எனது பணியை பற்றி மட்டுமே என்னால் பேச முடியும் என்றார்.

No comments:
Write comments