கோபன்ஹெகன்: டிவி நேரலையில் திடீரென மறைந்து போன பெண்ணால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.நம் கண் முன்னே மனிதர்கள் மறைந்து போகும் சம்பவங்களை, திரைப்படங்களில் கண்டிருப்போம். உலகின் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெற்றதாக கூற கேட்டிருப்போம். இந்நிலையில் டிவி நேரலையில் பெண் ஒருவர், திடீரென மறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம், தொலைக்காட்சி சார்பில் பேட்டி காணப்பட்டது.
அப்போது அவருக்கு பின்னால் இருந்த பெண்மணி, பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மாயமாகி விடுகிறார். இந்த காட்சிகள் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் எங்கு சென்றார் என்பது குறித்து, யாருக்கும் தெரியவில்லை. இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது, ஊழியரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக எந்தவித புகாரும் காவல்துறையிடம் அளிக்கப்படவில்லை. அது ஏலியனாக இருக்குமோ என்றும், ஒளியியல் மாயையாக இருக்குமோ என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Write comments