சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்தலுக்கு பின் வெளியிடப்படும் என டி.பி.ஐ தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகின்ற சமயத்தில் விடைத்தாள் திருத்தும் பணி சில நாட்கள் தாமதம் ஆனதாக டிபிஐ தெரிவித்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி ஏறக்குறையை நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது. வருகின்ற 17ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும், 25ஆம் தேதி 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ் கண்ட இணையதள்ளத்தில் வெளியிடப்படும். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதள முகவரிகள்
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic
No comments:
Write comments