தமிழக அரசவையில் கூடுதலாக 4 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதனை அடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கை 32 உயர்ந்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா கடந்த திங்களன்று சென்னை பல்கலைகழக்கத்தில் வைத்து நடைபெற்றது. பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுனர் ரோசய்யா செய்துவைத்தார். அன்று மாலையே அமைச்சகம் விரிவாக்கப்படுவதாக தமிழ அரசு அறிவித்தது. கூடுதலாக 4 அமைச்சர்களும் அவர்களுக்கான இலாக்காக்களும் வெளியாகியது.
சிவங்கங்கை தொகுதி பாஸ்கரன், ஆரணி தொகுதி ராமச்சந்திரன், வாணியம்பாடி தொகுதி நிலோபர், ஓசூர் தொகுதி பாலகிருஷ்ணன் ஆகிய நால்வரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்களுக்காக பதவி ஏற்றுக்கொண்டனர். இப்பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் வைத்து நடைபெற்றது. இதனையெடுத்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

No comments:
Write comments