தமிழக சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் எழுந்ததையொட்டு அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவை தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். நேற்றைய தினம் இவ்விரு தொகுதிகளையும் தவிர்த்து மீதமுள்ள 232 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருதேதிகளுக்கு ரெஸ்ட் எடுத்த அரசியல் வாதிகள் அனைவரும் இப்பொழுது அரவாக்குறிச்சியை நோக்கி படையெடுக்க துவங்கிவிட்டனர். இனி ஒருவாரத்திற்க் "அன்பு வாக்காளப்பெருமக்களே....!" தான்...
மறுபடியும் ஆரம்பத்திலேருந்தா...? எம்மாடி இப்பவே கண்ணகெட்டுதே..! என்பதுதான் அரவக்குறிச்சி மக்களின் மைண்ட் வாய்ஸ்

No comments:
Write comments