மும்பையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் கலந்து கொண்ட சோனம் கபூர் கூறியதாவது "ஓரினச்சேர்க்கை என்பது அடிப்படை மனித உரிமையாகும், அதில் தலையிடுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி வாழவேண்டும். மனிதர்கள் யாராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவரவாகவே இருக்க அனுமதியளிக்க வேண்டும். அவர்களை தடுப்பது என்பது மனித உரிமை மீறல் என்றே நான் கருதுகிறேன். எனவே இந்திய சட்டத்தின் விதியான 377 நீக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு. அவர்களுக்காக எப்பொதும் நான் ஆதரவாக இருப்பேன். ஷேக்ஸ்பியர் தொடர்பான இந்த விழாவில் பங்கு கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் பங்கெடுப்பதற்காக மும்பை வந்திருந்த பிரப்ல ஹாலிவுட் நடிகர் ஐயன் மெக்கல்லன் தானும் ஓரினச்சேர்கையாளர்தான் எனவும் இந்தியா ஓரினச்சேர்க்கை தொடர்பாக இன்னும் முன்னேற வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments