வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்ற்பெற்ற அதிமுக எம்.எல்.ஏ நிலோபர் கபீல் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார்.
வேலிக்கு திருடனையே பாதுகாப்பிற்கு வைப்பது போலத்தான் அதிமுக கதையும் ஆகிவிட்டது. யார் இந்த நிலோபர் ?. சில மாதங்களுக்கு முன்பு சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு போராட்டம் நடத்துகிறோம் என்கிற பெயரில் வேலூர் வாணிம்பாடியில் போராட்ட நடத்துகிறோம் என்ற பெயரில் வியாபாரிகளின் கடையை அடித்து நொறுக்கியவர் தான் இந்த நிலோபர்.
அதிமுகவின் குண்டர்களோடு இணைந்து ஒரு பெண் என்கிற அடக்க ஒடுக்கம் என்று எதுவும் இல்லாமல், ரோட்டில் திறந்திருந்த கடைகளை கட்டாயமாக மூட வேண்டும் என்று கூறி கடைகளை அடித்து நொறுக்கியவர். வயதான மூதாட்டி ஒருவர் கையில் வைத்திருந்த பழக்கூடையினை பிடுங்கி ரோட்டில் எறிந்ததும் இதே நிலோபர் தான். ஆளுங்கட்சியாக் இருந்த ஒரே காரணத்தினால் காவல்துறையும் அவர்களை வேடிக்கை பார்த்தது. இப்போது இதே நிலோபர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராம். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது.

No comments:
Write comments