மெக்ஸிகோ: அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் இரவு நேரத்தில் சாலை விதியை மீறியதற்காக காவல்துறையினரால் ஒரு பெண் பிடிக்கப்பட்டார், அபராதம் கட்டுவதற்கு பதிலாக உதட்டோடு முத்தம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் அந்த பெண். இதை வீடியோவாக எடுத்த டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது.
மெக்ஸிகோவில் இரவு நேரத்தில் சாலை விதிகளை மீறிச்சென்று காவல்துறையினரிடம் பிடிபட்டார். காவல்துறை அதிகாரி அபராதம் கட்ட வேண்டும் என்று சொன்னதற்கு அதற்கு பதிலாக முத்தம் தருகிறேன் என்று அப்பெண் கூறியிருக்கிறாள். ஓசியில்தானே கிடைக்கிறது எதற்கு வேண்டாம் என சொல்ல வேண்டும் என்கிற ரீதியில் அதிகாரியும் ஒப்புக்கொள்ள, அந்த பெண் போலீசை இழுத்து தன் உதட்டோடு சேர்த்து நச்சென்று கொடுத்திருக்கிறார்.
இச்சம்பவத்தை அந்த வழியில் சென்ற இன்னொரு மனிதர் தன்னுடைய காரில் இருந்தவாரே இதனை வீடியோ எடுத்து இன்டெர்நெட்டில் ஏற்றிவிட்டார். இது தற்போது டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த போலீஸ்காரரை எதிர்த்து சரமாரியாக மக்கள் திட்டி வருகின்றனர். இதுவும் ஒரு வகையான லஞ்சம் தான் எனக்கூறி அந்த அதிகாரியின் மேல் வழக்கு தொடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த அதிகாரி யார் என்று தெரிந்துவிட்டது. இனி அவர் தண்டனை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Write comments