Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 9, 2016

கருத்துக்கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை நம்பவேண்டாம்

கருத்துக்கணிப்புக்களை வெளியிடும் ஊடகங்களை தேமுதிக புறக்கனிக்குமாரு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜயகாந்த் பேசும்போது, திமுக - அதிமுக இரு கட்சிகளும் ஊடகங்களோடு கூட்டணி வைத்துள்ளன. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வெளியிடப்படும் அனைத்து கருத்து திணிப்புகள் தான். அவற்றில் எள்ளளவும் உண்மை இல்லை. அனைத்து ஊடகங்களும் திமுக, அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதற்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தமாகும். நாங்கள் ஆறுமுகம் இனி எப்போதும் எங்களுக்கு ஏறுமுகம்டான். திராவிட கட்சிகள் அனைத்தும் தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளனர்.


தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள்  மூலம் இரு திராவிட கட்சிகளும் கருத்து திணிப்பை வெளியிட்டு வருகின்றன். திமுக - அதிமுகவிடம் பணபலம் உள்ளது. என்னிடத்தில் மன பலம் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் தான் அதுவரை பொறுத்திருங்கள். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். தமிழகத்திற்கு நல்ல மாற்றம் ஏற்படும்.

நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எந்நேரமும் உழைக்ககூடியவர்கள். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் உடனே வருவோம். தப்பு எங்கு நடந்தாலும் எனக்கு தெரியாமல் இருக்காது. தப்பு யார் செய்தாலும் அடிப்பேன். விவசாயத்தை எனது இரு கண்களாக நினைக்கின்றேன். தமிழகத்தை நல்ல நிலைக்கு கண்டிப்பாக கொண்டு வருவேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic