தென்இந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. எந்த முறையும் இல்லாத அளவிற்கு இரு பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல்வாதிகளை மிஞ்சு அளவிற்கு ஒவ்வொரு அணியினரும் மற்றை அணியினரை கடுமையாக சாடி குற்றஞ்சுமத்தினர். இதநாள் வரை நடிகரி சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த ராதாரவியும் விஷாலும் எதிர் எதிர் அணியில் இருந்ததால் இரண்டுபேருக்கும் மத்தியில் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் மருது படம் தொடர்பாக இயக்குனர் முத்தையா தன்னிடம் கதை சொன்ன போது அதனை ஏற்றுக்கொண்டதாகவும், பின்னர் கதையின் ஒரு பாத்திரத்திற்கு நடிகர் ராதரவி பொருத்தமானவராக இருப்பார் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் உங்களுக்கு எப்படி என இயக்குனர் கேட்டபோது, தனக்கும் ராதரவிக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை, நடிகர் சங்கம் வேறு, நடிப்பு என்பது வேறு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எண்ணங்கள் சிந்தனைகள் இருக்கும், அதன் அடிப்படையிலேயே இரண்டு பேரும் எதிரெதிர் துருவங்களில் நின்றதாகவும் குறிப்பிட்டார். நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்து நின்றதால் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்வதெல்லாம் தவறு, அவரோடு தான் ஒரு படத்திலும் நடித்தது இல்லை, அவரோடு இணைந்து நடிப்பதற்கும் தான் ஆவலாக உள்ளதாக இயக்குனரிடம் கூறியதாக கூறும் விஷால், அவரோடு நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். இப்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்கிறேன் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தன்னிடம் கூறுமாறு ராதாரவி கூறியதாக விஷால் கூறினார்.

No comments:
Write comments