முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நன்பல் 12 மணி அளவில் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக தரப்பில் மு.க ஸ்டாலின் உட்பட ஏராளமான எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் ஒரு பலமான எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள முக ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இருக்கை போடப்பட்டத்தை பார்க்கும் போது ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது. தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாருக்கு முன்வரிசையில் இடம்போட்டதை பார்க்கும் போது ஜெயலலிதா திருந்தப்போவதில்லை என்றே தெரிகிறது. இனி தமிழக மக்கள்தான் திருந்த வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார் கருணாநிதி.

No comments:
Write comments