தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா வெகு ஜோராக தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. தேர்தல் ஆணையம் என்னதான் கண்ணுல எண்ணெய் ஊற்றி விழிச்சிருந்து கண்காணித்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா கச்சிதமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் மின்சார சப்ளையை நொண்டி சாக்கு சொல்லு நிறுத்திவிட்டு ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என இருவரும் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களே! ராத்திரி உங்க ஏரியால பவர்கட்டாகுதா...? திருடன் வந்துருவானேன்னு கதவ பூட்டி வச்சிறாதீங்க. இப்ப வர்ற திருடன் உங்களுக்கு பணத்தை தர வர்றானே தவிற பணத்தை புடுங்குவதற்கு அல்ல.
மக்களே! ராத்திரி உங்க ஏரியால பவர்கட்டாகுதா...? திருடன் வந்துருவானேன்னு கதவ பூட்டி வச்சிறாதீங்க. இப்ப வர்ற திருடன் உங்களுக்கு பணத்தை தர வர்றானே தவிற பணத்தை புடுங்குவதற்கு அல்ல.

No comments:
Write comments