சமூவலைதளமான டிவிட்டரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா சதுர்வேதி மத்தியில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நிர்பயா போன்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவாய் என ஒரு மிரட்டல் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா சந்தித்தார். இந்நிலையில் டுவிட்டரில் அவர் தெரிவிக்கும்போது ஸ்மிருதி ராணியின் உயிருக்கு ஆபத்து என தகவல் கிடைத்ததை அடுத்து அவருக்கு உடனடியாக இஜட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை கற்பழுத்து கொன்றுவிடுவேன் என மிரட்டியது தொடர்பாக விசாரணை கூட நடத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்மிருதி ராணி தன்க்கு அந்த மாதிரியான பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனக்கூற, அதற்கு பதலளித்த பிரியங்கா உள்துறை அமைச்சகம் என்னென்ன செய்கிறது என்பது எனக்கு தெரியாது என்றும் செய்தித்தாள்களில் வந்த செய்தியை வைத்தே தான் இதை சொன்னதாக தெரிவித்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனர்.

No comments:
Write comments