இசைஞானி இளையராஜாவிற்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
இசைஞானி இளையராஜா வெகுவிரைவில் அமெரிக்காவில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாரா. இதற்காக எஸ்.பி பாலசுப்பிரமணியத்தை தன் வீட்டிற்கு அழைத்து, தான் நடத்தப்போகும் இசை நிகழ்சிக்கு தன்னோடு அமெரிக்கா வரவேண்டும் என இசைஞானி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய 50 வருட இசையுலகப்பயணம் தொடர்பாக வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் தான் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தன்னால் அமெரிக்காவிற்கு வர இயலாது என எஸ்.பி.பி கூறியதாக தெரிகிறது.
இதனால் கடும் கோபமடைந்த இளையராஜா அப்படி உன்னால் என்னோடு அமெரிக்கா நிகழ்ச்சிக்கு வர முடியாது என்றால், உனக்கு உன்னுடைய நிகழ்ச்சிகள் தான் முக்கியமானதாக தெரிந்தால், இனிமேல் எந்த மேடைகளிலும் எனது பாடல்களை நீ பாடக்கூடாது என தெரிவித்துவிட்டாராம் இளையராஜா. இதனால் கடும் சோகத்தில் எஸ்.பி.பி இருப்பதாக தகவல்.

No comments:
Write comments