சேலத்திலிருந்து சென்னை வந்த இரயிலிருந்து 5.75 கோடி ரூபாயை கொள்ளையடித்தது வட மாநில கும்பல் என்றும் அதில் இருவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சேலத்திலிருந்து சென்னை மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு பழைய மற்று கிழிந்த ரூபாய் நோட்டுகள் இரயிலில் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 350 கோடி ரூபாயை இரயிலின் சரக்கு பெட்டியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. சென்னை வந்த இரயிலில் பணத்தை எடுக்கச்சென்ற போது அதிலிருந்து 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கு மறுநாளே சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரிக்க துவங்கிய சி.பி.ஐ அதிகாரிகள் ஆரம்பம் முதலே பல்வேறு வகையில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். தற்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மொத்தம் 5 பேர் சேர்ந்த் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். அதில் இருவரை கைது செய்துவிட்டதாகவு எஞ்சியுள்ள 3 நபர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.
கடந்த வாரம் சேலத்திலிருந்து சென்னை மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு பழைய மற்று கிழிந்த ரூபாய் நோட்டுகள் இரயிலில் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 350 கோடி ரூபாயை இரயிலின் சரக்கு பெட்டியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. சென்னை வந்த இரயிலில் பணத்தை எடுக்கச்சென்ற போது அதிலிருந்து 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கு மறுநாளே சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரிக்க துவங்கிய சி.பி.ஐ அதிகாரிகள் ஆரம்பம் முதலே பல்வேறு வகையில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். தற்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மொத்தம் 5 பேர் சேர்ந்த் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். அதில் இருவரை கைது செய்துவிட்டதாகவு எஞ்சியுள்ள 3 நபர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளனர்.

No comments:
Write comments