1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹனிப் கடவாலா. இவர்தான் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை குஜராத்தில் இருந்து மும்பைக்கு கொண்டு வந்ததாகவும், நடிகர் சஞ்சய் தத்திடம் ஏ.கே.47 ரக துப்பாக்கியை கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஜாமீனில் வெளியில் இருந்த இவர், 2001ஆம் ஆண்டு மும்பையில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை மும்பை போலீசிடம் இருந்து சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசின் சிபாரிசின் பேரில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கொலை தொடர்பாக, தற்போது ஜெயிலில் உள்ள சோட்டா ராஜன் மீதும், அவருடைய கூட்டாளி குரு சதாம் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

No comments:
Write comments