Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

மர்ம பெட்டியால் தலைதெறிக்க ஓடிய பயணிகள்!

passengers fled away on seeing suitcase

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்மப் பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதியில் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி பார்வையாளர் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை அட்டை பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

இதைக்கண்ட மத்திய தொழிற்படை போலீசார், அந்த பெட்டி யாருடையது? என்று விசாரித்தனர். ஆனால் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.

இதனால் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர்.

அட்டை பெட்டியை சுற்றிலும் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது.இதைக் கண்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளும், பார்வையாளர் பகுதிக்கு வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள்.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.பின்னர் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரொட்டி தயாரிக்கும் கருவி இருந்தது.

பயணிகள் யாராவது அந்த பெட்டியை மறந்து போய் தவற விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இதையடுத்து அந்த அட்டை பெட்டி, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: மாலை மலர்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic