Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

அம்மணி - திரைவிமர்சனம்

ammani tamil movieகரு : சொத்து சுகம் , அரசு உத்தியோகம் , மூன்று பிள்ளைகளுடன் கூடிய குடும்பம்.. எனும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஒரு கட்டத்தில் ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணிக்கு சுமையாயாய் தெரிய ., அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாது ,வாரிசுமின்றி வயதான காலத்தில் புருஷனையும் இழந்து, உழைப்பை மட்டுமே நம்பி , மனதளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து மடியும் ஒரு வயோதிகப் பெண்மணியின் வாழ்க்கை சுகமாக தெரிகிறது . அதன் விளைவாக., தன் சொந்த பந்தங்கள் , சொத்து சுகங்களைவிட்டு .,அவ்வயோதிக பெண்மணி மாதிரியான ஒரு வாழ்க்கைக்கு போய் ., தன் வாழ்க்கையில் மாண்டு போன சந்தோஷங்களை மீண்டும் கொண்டு வர முயலும் ஒரு பெண்மணியின் வாழ்க்கைதான் "அம்மணி" படத்தின் கரு!

கதை : அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார் . பெரிய பையன் எந்நேரமும் குடியே....கதியென்று கிடக்கிறான். இளைய மகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு ஓட்டிவருகிறான். இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் சொந்த வீடு ஒன்றை கடன் வாங்கி கட்டி முடிக்கிறார். கடைசியில், அந்தகடனை கட்ட பணம் இல்லாததால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார்.

அந்த நேரத்தில் அவரது மகன்கள்,மகள்கள் இவள் மீது பாசம் காட்டுகிறார்கள். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனதுபெயரில் அந்த வீட்டைஎழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டைவிட்டு விரட்டுகிறான். இதனால் விரக்தியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அவர் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அம்மணி பாட்டி ஆதரவுகொடுக்கிறார்.

அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டுஅதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் அவரைப் போல வாழ நினைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அதன்பிறகு என்னாவாயிற்று? அவரது மகன்கள் அவரை புரிந்துகொண்டார்களா..? இல்லை பிரிந்து சென்றனரா ...? என்பதே அம்மணியின் வித்தியாசமும் , விறுவிறுப்பு மாண யதார்த்தமான மொத்தக்கதையும் .

காட்சிப்படுத்தல் : குணச்சித்திர நடிகையும், பெண் இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்திலும் , நடிப்பிலும்., "டேக் " எண்டர்டெயின்மென்ட் வென் கோவிந்தாவின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான படமான் "அம்மணி" யில் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் யதார்த்தமாக . காட்சி படுத்தப்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார்.

கதைநாயகி : ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஆயாவாக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்லட் கமிராம கிருஷ்ணன் பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.

அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியரான ஆயாம்மா .. என்றாலும் அரசு ஊழியர் ...சொந்த வீட்டுக்காரர் ...மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ... என்று ஆரம்பத்தில் , 'கெத்'துடன் திரியும் சாலம்மாவாகவும் , பின் , பணஉபகாரம் மட்டுமே எதிர்பார்க்கும் உறவை வெறுத்து, சலித்து.. ஒதுங்கும் சாதாரண அம்மாவாகவும் ... சபாஷ் , சாலம்மா எனும் படியான கதையின் நாயகியாக, லஷ்மி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை ... வாழ்ந்திருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள் :அம்மணி பாட்டியாக வரும்சுப்புலட்சுமி பாட்டியின் துறு
துறு நடிப்பும் நம்மை கவர்கிறது. லஷ்மியையும் மிஞ்சுகிறார்... இப்பட டைட்டில் நடிகையான இந்த அம்மனி - எனும் சுப்பு லஷ்மி பாட்டிம்மா. அம்மனி மிக்ஸ் எனும் அளவிற்கு ., பழைய புதிய பாடல்களை அவ்வப்போது பிள்ளைகளால் சாலம்மாவின் நிர்கதி நிலை புரிந்தும் புரியாமலும் .,பாடி சாலம்மாவை சகஜ நிலைக்கு கொண்டு வருவதில் தொடங்கி ., " இனி , இது தேவையில்லாபாரம் ... இந்தா , நீ வச்சுக்க ... " என தன் சாவுக்கு முன் தனது நகைகளைசாலம்மாவிடம் கொடுப்பது வரை ... ஒவ்வொரு காட்சியிலும் நாம் , கண்டுகொள்ளாது விட்ட நம் பாட்டி - தாத்தாக்களை நம் கண் முன் நிறுத்துகிறார்.

மேலும் .,சாலம்மாவின் இளைய மகனாக பெற்றோரின் சொத்து மட்டுமே குறிக்கோளான இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் ஆட்டோ டிரைவர் சிவா வாக நிதின் சத்யா கச்சிதம் . அம்மாவிடம் கோபப்பட்டு இவர்பேசும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல
வைக்கிறது. "ஜெயிக்கிறவனுக்கு தான்டா இங்க மரியாதை ...." என நண்பனிடம் புலம்பும் சாலம்மாவின் குடிகார மூத்த மகன் செல்வமாக ஸ்ரீ பாலாஜி , ஆயாவின் ரிட்டயர்டுமென்ட் பணத்தில் பாரின் போகத்துடிக்கும் சாலம்மாவின் ஒடிப்போன மகள் வழிப் பேரன் சரவணனாக ரெஜின் ரோஸ், வாயாடி மருமகள்கள் வெண்ணிலாவாக ரேணுகா .சி , அமுதா வாக எஸ்.அன்னம் ., சாலம்மாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தபடி ., மீன்பாடி வண்டி இழுக்கும் முத்து வாக ஜார்ஜ் மரியான்...உள்ளிட்ட ஒவ்வொருவரும் சாலம்மா , அம்மணிக்கு ஈடு கொடுத்து தங்கள் பாத்திரங்களுக்கு வலு சேர்த்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்இ வர்களைப் போன்றே எமதர்ம ராஜாவாக வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு செல்கின்ற ரோபோ சங்கர்.... செம ஹாசம்.

தொழில்நுட்பகலைஞர்கள் : . இம்ரானின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. இவரது ஒளிப்பதிவில் பெரும்பாலான இரவு நேர காட்சிகள் சென்னையின் யதார்த்தை பிரதிபலிக்கும் வகையில் இயல்பாய் மிளிருகிறது. கே வின் இனிய , இயல்பான இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், பின்னணி இசை மென்மையாக வருடுகிறது. ரெஜித் .கே.ஆரின் படத்தொகுப்பு , பலே தொகுப்பு.

பலம் : "பிரதமரே குப்ப பொறுக்க சொல்றார்டி ...." , "அப்படிப் பார்த்தா எல்லோருமே தனி மரம் தாண்டி .... இந்த வெளிச்சம் போன நிழல் கூட நமக்கு சொந்தமில்லை ... " உள்ளிட்ட 'பன்ச்' டயலாக்குகள் படத்திற்கு பெரும் பலம் . மேலும் யதார்த்தமான ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.

பலவீனம் :படம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இது பலமா ? பலவீனமா..? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும் .

இயக்கம் : லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தை நன்கு மெருகேறியிருக்கிறார். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நம் கண் முன்னேகொண்டு வந்திருக்கிறார். அதேபோல், பணம்தான் இன்றைய கால சூழ்நிலையில் முக்கியம் என்றுஇன்றைய தலைமுறையில் நடக்கும்நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல், படத்தில் இடம்பெறும் "வலையில மீன் மாட்டட்டும் வறுக்கறதா .. குழம்பு வைச்கிறதா ன்னு அப்புறம் முடிவு பண்ணலாம் ... ", "கண்ண மூடிட்டா அமைதியா போறமா , ஆரவாரமா போறமா ...ன்னு யாருக்குத் தெரியும்...?", உள்ளிட்ட வசனங்களும் படத்திற்குபக்கபலமாக இருக்கிறது. குத்தாட்ட சுவர்ச்சிஇல்லாமல், நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் மனங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை மட்டுமே வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டியே ஆகவேண்டும்.

மேலும் .,நம் ஊர் அரசு ஆஸ்பத்திரிகளின் லஞ்ச லாவண்ய அவல நிலையை அழகாக தன் , நடிப்பின் மூலமும் இயக்கத்தின் மூல மும் அம்சமாக ,அசத்தலாக தோலுரித்துக் காட்டியிருக்கும் பெண்இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன் ., மேலும் எண்ணற்ற விஷயங்களையும் சமூக அக்கறையுடன் சொல்லி ., கடைசி காலத்தில் காப்பாத்து வார்கள்... என பிள்ளைகளை மலைபோல நம்பும் பெற்றோருக்கு., பெரும்பாடமாக "அம்மணி" யை மிகவும நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் தன் எழுத்து , இயக்கத்தில் படைத்திருக்கிறார். லட்சுமி .
ஆகமொத்தத்தில் ‘அம்மணி’ அனைவருக்குமான படம், பாடம்!

பைனல் "பன்ச் " : மொத்தத்தில் அனைவரும் காணவேண்டிய "பெண்மணி' - 'அம்மணி! "

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic